Skip to main content

Posts

Showing posts from August, 2016

‪மெளனமான‬ ‪நினைவுகள்‬-1

ஒரு வார விடுமுறைக்கு பின் , முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அடுத்த செமஸ்ட்டரை எதிர்ப்பார்ப்போடு எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தோம். மீண்டும் அதே சிரிப்புடன் , சின்ன சின்ன சண்டைகளுக்கிடையே நாட்கள் நகர்ந்தது. இரண்டாம் செமஸ்ட்டரில் இருந்து வாரவிடுமுறையில் ஊர் சுற்றலாம் என்பது எங்கள் கல்லூரியின் தளர்த்தப்பட்ட விதி. அவ்விதி அமலுக்கான அடுத்தவாரமே பெரியதாய் சிந்தித்து முடிவில் படத்திற்கு போகலாம் என்பதை ஒருமனதாய் உறுதி செய்தோம். நண்பர்களுடன் முதல் பட அனுபவம் உண்மையில் எவ்வளவு அழகானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியா கவிதை அது. ஆனால் அக்கவிதையும் பிழையாகும் என்பதை அந்நாளே அறிந்து கொண்டோம். பெதுவாக பெண் தோழிகளுடன் படத்திற்க்கு சென்றாலே இங்கு உள்ள பல அழுக்கான உள்ளங்கள் தவறாக சிந்திக்கும் அதையும் தத்ரூபமாய் மற்றொருவரிடம் சித்தரிக்கும் என்பதை அதுவரை எங்கள் மனம் அறியவில்லை. கேலிகள் அதிகமாயின , அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் செவிகள் செவிடாய் இருந்ததே தவிர சந்தோஷத்தை இழக்கவில்லை. உண்மையில் நந்தினியும் , ஐஸ்வர்யாவும் அவர்கள் செய்யும் கேலியை ஒரு பெருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. நந்

‎மெளனமான‬ ‪‎நினைவுகள்‬

நான்கு ஆண்டுகள் , ஆம் எனக்கு நினைவிருக்கிறது. கலைந்தோடும் காலங்களில் எனது நட்பும் சில்லரைக்காசாய் சிதறிப்போனது. நான் ராம்.பள்ளி எனும் இடுகுழியிலிருந்து தப்பித்து பொறியியலில் தலைநுழைத்த முற்போக்காளன். கல்லூரி வாசல் தான் பல புள்ளி கோலமாய் என்னை புதிய கோட்டிற்க்குள் இணைத்தது. கணிணி அறிவியல் என்பதால் பெண்களுக்குள்ளான பாகுபாடை மறந்து சமநிலை உணர்வை முதல்நாளே அவ்வகுப்பறை என் மனதில் பதித்தது. நான் மட்டுமல்ல என்னுடன் முதல் நாள் நட்பான தீலிப்பிற்க்கும் , சலீம்மிற்க்கும் அதே மனநிலை தான். அரட்டைகள் அரங்கேற்றமாகின , சிரிப்பிற்க்கு பஞ்சமில்லா காலமது. வாழ்க்கையின் சுகமான அனுபவங்களை கண்ணெதிரே கண்டு குதூகளித்து கொண்டிருந்தோம். மூவராய் சிரித்த உதடுகள் ஐந்தாகி போனது ஒரே மாதத்தில். நந்தினி என்ற நல்லவளும் , ஐஸ்வர்யா என்ற அடாவடியும் எங்கள் கைகளோடு விரல் கோர்த்த தருணம் அது , உண்மையில் நினைத்தாலே மனமெல்லாம் மழைச்சாரல் தெளிக்கிறது. நான்கு தலைகள் கல்லூரி விடுதிக்குள்ளும் , நந்தினி என்ற நல்லவள் மட்டும் வீட்டிற்க்குள்ளும் அடைக்கலமாய் அடைந்து கிடந்தோம். வகுப்பறை தான் எங்கள் சொர்க்கவாசல் , தி

‪சாமானியனின்‬ ‪ஆதங்கம்‬

ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது. நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும். நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல. பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான். ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர். ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும். அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநி